மனிதப்பிறவியின் அடையாள அட்டையே
என் மனதை உலகிற்கு பிரதிபோட்டு காட்டுகிறாய் .
சின்னதாய் ஒருமுறை ,சிக்கனமாய் சிலமுறை ,
சத்தமாய் பலமுறை ,வெட்கமாய் சிலமுறை ,
எத்தனை பிறவியை எனக்காக எடுக்கிறாய் ...
புன்னகை பெண்ணிடம் பொன்னகை பார்த்ததில்லை .
சில கண்ணிலும் புன்னகை மின்னலாய் பார்க்கிறேன் .
கவிதையாய் உன்னை கரையேற்றி விட்டால்
என் கற்பனை கரைந்து காணாமல் போகும் ,
அகவே , மிச்சத்தை மனதில் அசைபோட்டு கொண்டு
அடுத்தவரிடம் உன்னை அறிமுகம் செய்வேன் .
---அருண்:)
Thursday, December 30, 2010
Saturday, December 4, 2010
அன்புள்ள மகனுக்கு..
உன் நேரத்தை வீணடிக்க விரும்பாதபோதும்
என் சோகத்தை சொல்ல எனக்கு வேறாரும் இல்லை.
தள்ளாத வயதில் தனியாக ஏனோ
பொல்லாத உலகில் போராட முடியவில்லை.
உன் சிரிப்பொலியை கேட்ட சுவர்களுக்கிடையே
என் எதிரொலியை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
மாதம் ஒருமுறை உன் குரல் கேட்கும் இன்பம்
மாதாமாதம் நீ அனுப்பும் காகிதங்களில் இல்லை.
நீ தொட்டு சென்ற பொருள்களையெல்லாம்
தடவிப்பார்த்தே காலம் தள்ளுவேன்.
சத்தில்லா இந்த சருகான தேகம்
சட்டென்று ஒரு நாள் சாய்ந்தாலும் சாயும்.
எனை "ஈ" மொய்க்கும் செய்தியை காதோரம் கேட்டால்
"அம்மா" என்றழுது ஓடோடி வருவாயா!!!!
இப்படிக்கு
உன்னை பெற்றெடுத்த மலடி.
என் சோகத்தை சொல்ல எனக்கு வேறாரும் இல்லை.
தள்ளாத வயதில் தனியாக ஏனோ
பொல்லாத உலகில் போராட முடியவில்லை.
உன் சிரிப்பொலியை கேட்ட சுவர்களுக்கிடையே
என் எதிரொலியை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
மாதம் ஒருமுறை உன் குரல் கேட்கும் இன்பம்
மாதாமாதம் நீ அனுப்பும் காகிதங்களில் இல்லை.
நீ தொட்டு சென்ற பொருள்களையெல்லாம்
தடவிப்பார்த்தே காலம் தள்ளுவேன்.
சத்தில்லா இந்த சருகான தேகம்
சட்டென்று ஒரு நாள் சாய்ந்தாலும் சாயும்.
எனை "ஈ" மொய்க்கும் செய்தியை காதோரம் கேட்டால்
"அம்மா" என்றழுது ஓடோடி வருவாயா!!!!
இப்படிக்கு
உன்னை பெற்றெடுத்த மலடி.
பூக்கள்
" பூக்கள்" எழுதும்போதே வாசத்தை உணருகிறேன்.
உன் பெயரை கூட என் பேனா முள் குத்திவிடகூடாது .
ஏய், காற்றின் காதலியே,
என்னையும் ஒரு முறை உன் ஓரக்கண்ணில் பாறேன் ...
அடடா! எத்தனை பெருந்தன்மை!
உன்னை பறித்த பிறகும் ,எங்களை பார்த்து சிரிக்கிறாயே.
அடடா! எத்தனை தியாகம்!
உன் கண்ணீரையும் எங்களுக்கு பன்னீராக்குகிறாயே !
ஓப்புக்கொள்கிறோம். உன் ஒரு நாள் வாழ்க்கையின் முன்
எங்கள் ஓரு ஜென்ம வாழ்க்கை தோற்றுப்பொய்விட்டது !
புன்னகை பூக்களுடன்
அருண்:)
உன் பெயரை கூட என் பேனா முள் குத்திவிடகூடாது .
ஏய், காற்றின் காதலியே,
என்னையும் ஒரு முறை உன் ஓரக்கண்ணில் பாறேன் ...
அடடா! எத்தனை பெருந்தன்மை!
உன்னை பறித்த பிறகும் ,எங்களை பார்த்து சிரிக்கிறாயே.
அடடா! எத்தனை தியாகம்!
உன் கண்ணீரையும் எங்களுக்கு பன்னீராக்குகிறாயே !
ஓப்புக்கொள்கிறோம். உன் ஒரு நாள் வாழ்க்கையின் முன்
எங்கள் ஓரு ஜென்ம வாழ்க்கை தோற்றுப்பொய்விட்டது !
புன்னகை பூக்களுடன்
அருண்:)
Sunday, August 22, 2010
விதி
ஏய் விதியே,
சுமையுடன் துடிக்கும் இதயம்
வலியுடன் சிரிக்கும் இதழ்கள்
கனவுகள் கலைந்த தூக்கம்
இன்பமே இல்லா இளமை
நம்பவே முடியவில்லை....
இத்தனைக்கும் காரணம் நீயா என்று..!
மன்னித்துவிடு ...
உன்னைவிட்டால் எனக்கு குறைகூற ஆளில்லை..!
எத்தனையோ எலும்புகளும் சதைகளும் உலவும் இவ்வுலகில்
எதற்காகவோ நானும் உலவிக்கொண்டிருகிறேன்.
இன்னும் சில நாட்களில், கண்ணீர் இல்லாமல்
என் விழிகளே வழிந்துவிடலாம்..
பரவாயில்லை...
நான் தோற்றால்தான் நீ வெல்வாய்யென்றால்
உனக்காக வாழ் நாள் முழுதும்கூட தோற்றுக்கொண்டே இருப்பேன்...:)
புன்னகையுடன்
அருண்
சுமையுடன் துடிக்கும் இதயம்
வலியுடன் சிரிக்கும் இதழ்கள்
கனவுகள் கலைந்த தூக்கம்
இன்பமே இல்லா இளமை
நம்பவே முடியவில்லை....
இத்தனைக்கும் காரணம் நீயா என்று..!
மன்னித்துவிடு ...
உன்னைவிட்டால் எனக்கு குறைகூற ஆளில்லை..!
எத்தனையோ எலும்புகளும் சதைகளும் உலவும் இவ்வுலகில்
எதற்காகவோ நானும் உலவிக்கொண்டிருகிறேன்.
இன்னும் சில நாட்களில், கண்ணீர் இல்லாமல்
என் விழிகளே வழிந்துவிடலாம்..
பரவாயில்லை...
நான் தோற்றால்தான் நீ வெல்வாய்யென்றால்
உனக்காக வாழ் நாள் முழுதும்கூட தோற்றுக்கொண்டே இருப்பேன்...:)
புன்னகையுடன்
அருண்
Wednesday, July 14, 2010
வறுமை
அளவிள்ளா ஆனந்தம் நெஞ்சடைக்கும் போதும்
அரைஅடி கூட சிரிக்க முடியாத உதடுகள்...
இலை நிறைய உணவை பறிமாறும்போதும்
குடல் நிறைந்துவிட்டால் மறியல் செய்யும் வயிறு...
கடலளவு சோகம் கரை புரளும் போதும்
சிறுசிறு துளிகளையே சிந்துகின்ற கண்கள்...
ஆறடுக்கு மாளிகைக்கு சொந்தமான போதும்
ஆறடிக்குமேல் அடைத்துகொள்ள முடியாத உடல்....
இத்தனை வறுமை நம்முள் இருக்க
நாம் எப்படி செல்வந்தர் ஆவோம்?
அரைஅடி கூட சிரிக்க முடியாத உதடுகள்...
இலை நிறைய உணவை பறிமாறும்போதும்
குடல் நிறைந்துவிட்டால் மறியல் செய்யும் வயிறு...
கடலளவு சோகம் கரை புரளும் போதும்
சிறுசிறு துளிகளையே சிந்துகின்ற கண்கள்...
ஆறடுக்கு மாளிகைக்கு சொந்தமான போதும்
ஆறடிக்குமேல் அடைத்துகொள்ள முடியாத உடல்....
இத்தனை வறுமை நம்முள் இருக்க
நாம் எப்படி செல்வந்தர் ஆவோம்?
Sunday, June 6, 2010
நம்பிக்கை
நாளையும் கண்விழிப்போம் என பலரது நம்பிக்கை
நாளையாவது கண்மூடுவோம் என சிலரது நம்பிக்கை
காதலன் கைபிடிப்பான் என காதலியின் நம்பிக்கை
கடைசியில் காப்பாற்றுவான் என பெற்றோரின் நம்பிக்கை
பசியாற்றும் என கைசூப்பும் குழந்தையின் நம்பிக்கை
பறிக்கபடமாட்டோம் என் பூக்கும் பூக்களின் நம்பிக்கை
வலைவிரித்து காத்திருக்கும் சிலந்தியின் நம்பிக்கை
இறைதேடி பறந்திருக்கும் பறவையின் நம்பிக்கை
பொய்யாகிப்போகலாம்! நம் வாழ்வில் சில நம்பிக்கைகள்..
பொய்யாகிபோகாது! நம்பிக்கைமீதுள்ள நம்பிக்கை...
நாளையாவது கண்மூடுவோம் என சிலரது நம்பிக்கை
காதலன் கைபிடிப்பான் என காதலியின் நம்பிக்கை
கடைசியில் காப்பாற்றுவான் என பெற்றோரின் நம்பிக்கை
பசியாற்றும் என கைசூப்பும் குழந்தையின் நம்பிக்கை
பறிக்கபடமாட்டோம் என் பூக்கும் பூக்களின் நம்பிக்கை
வலைவிரித்து காத்திருக்கும் சிலந்தியின் நம்பிக்கை
இறைதேடி பறந்திருக்கும் பறவையின் நம்பிக்கை
பொய்யாகிப்போகலாம்! நம் வாழ்வில் சில நம்பிக்கைகள்..
பொய்யாகிபோகாது! நம்பிக்கைமீதுள்ள நம்பிக்கை...
Sunday, May 30, 2010
குருவிக்கூடு
மறப்பேனா அன்னையே!
என் பசியையும் ருசியையும் பார்வையிலேயே
தெரிந்துகொள்ளும் உன் பாசத்தை...
என் கழுத்துவரை அன்னமிட்டும் "இன்னும் கொஞ்சம்"
என இன்றுவரை நீ கெஞ்சுவதை....
என் நெற்றிதுளிகல் எட்டி பார்க்கும்முன்
தொட்டு துடைக்கும் உன் புடவை முந்தானையை
மறப்பேனா அன்னையே!
உன் கரம் மீது கண்ணுறங்கிய அந்த சில நாட்களை!
மறப்பேனா தந்தையே!
அதிகலை மூன்றுக்கும் எனக்காக தனியாக
நீ காத்திருந்த காலங்களை...
என் தலையருகே விசிரியபடி நான் கண்ணுறங்க
நீ கண்விழித்த இரவுகளை...
எனக்காக சிரம்பட்டு,எனக்காக கடன்பட்டு
நீ பட்ட கஷ்டங்கள்...
மறப்பேனா தந்தையே!
என் வெள்ளை சட்டை உன் வியர்வையில் சலவை செய்தது என்பதை!
மறப்பேனா அண்ணனே!
ஓரு தட்டில் ஒன்றக நாம் பசியாரிய நாட்களை!
மறப்பேனா தம்பியே!
உன் மழலை மொழியை மணிக்கனக்காய் ரசித்ததை!
முள்ளின் மீதே தூங்கினாலும்
குத்தவில்லை இந்த குருவிக்கூட்டில்..!
என்ன தவம் செய்தேனொ,
வரங்களுடனே வாழ்கிறேன்..!
என் பசியையும் ருசியையும் பார்வையிலேயே
தெரிந்துகொள்ளும் உன் பாசத்தை...
என் கழுத்துவரை அன்னமிட்டும் "இன்னும் கொஞ்சம்"
என இன்றுவரை நீ கெஞ்சுவதை....
என் நெற்றிதுளிகல் எட்டி பார்க்கும்முன்
தொட்டு துடைக்கும் உன் புடவை முந்தானையை
மறப்பேனா அன்னையே!
உன் கரம் மீது கண்ணுறங்கிய அந்த சில நாட்களை!
மறப்பேனா தந்தையே!
அதிகலை மூன்றுக்கும் எனக்காக தனியாக
நீ காத்திருந்த காலங்களை...
என் தலையருகே விசிரியபடி நான் கண்ணுறங்க
நீ கண்விழித்த இரவுகளை...
எனக்காக சிரம்பட்டு,எனக்காக கடன்பட்டு
நீ பட்ட கஷ்டங்கள்...
மறப்பேனா தந்தையே!
என் வெள்ளை சட்டை உன் வியர்வையில் சலவை செய்தது என்பதை!
மறப்பேனா அண்ணனே!
ஓரு தட்டில் ஒன்றக நாம் பசியாரிய நாட்களை!
மறப்பேனா தம்பியே!
உன் மழலை மொழியை மணிக்கனக்காய் ரசித்ததை!
முள்ளின் மீதே தூங்கினாலும்
குத்தவில்லை இந்த குருவிக்கூட்டில்..!
என்ன தவம் செய்தேனொ,
வரங்களுடனே வாழ்கிறேன்..!
Saturday, May 15, 2010
ஏமாற்றம்
சலிக்காமல் எனை சந்திக்கும் ஏமாற்றமே உன்னால்...
கண்ணுக்கும் தெரியாமல் அழுகின்றேன்
முன்போல மூச்சிவிட மறக்கின்றேன்.
கண்ணீரின் வெப்பத்தில் கறைகின்றேன்
என் கவலைகளை கவிதையாய் கறைக்கின்றேன்.
சிரிக்கின்ற சில நாளை பறிக்கின்ற நீயே
என் இதயத்தின் துகள்களை எண்ணி எனக்கு சொல்லு...!
இமயமாய் கனக்கும் இத்தனை வலிகளை
எழுதுகோளின் முனைவரை எடுத்துவர முடியவில்லை...!
எத்தனை முறைதான் விழுவேன் ! எத்தனை முறைதான் அழுவேன்!
அத்தனையும் மறக்கிறேன்..அடுத்தவருக்காக சிரிக்கிறேன்..!
விடுகதையாய் இருக்கும் இந்த வாழ்க்கையில் ஏனோ
தொடர்கதையாய் துரத்துகிறது இந்த (ஏ)மாற்றங்கள்...!
-அருண்குமார்
கண்ணுக்கும் தெரியாமல் அழுகின்றேன்
முன்போல மூச்சிவிட மறக்கின்றேன்.
கண்ணீரின் வெப்பத்தில் கறைகின்றேன்
என் கவலைகளை கவிதையாய் கறைக்கின்றேன்.
சிரிக்கின்ற சில நாளை பறிக்கின்ற நீயே
என் இதயத்தின் துகள்களை எண்ணி எனக்கு சொல்லு...!
இமயமாய் கனக்கும் இத்தனை வலிகளை
எழுதுகோளின் முனைவரை எடுத்துவர முடியவில்லை...!
எத்தனை முறைதான் விழுவேன் ! எத்தனை முறைதான் அழுவேன்!
அத்தனையும் மறக்கிறேன்..அடுத்தவருக்காக சிரிக்கிறேன்..!
விடுகதையாய் இருக்கும் இந்த வாழ்க்கையில் ஏனோ
தொடர்கதையாய் துரத்துகிறது இந்த (ஏ)மாற்றங்கள்...!
-அருண்குமார்
Saturday, May 1, 2010
முத்தம்
அர்த்தங்கள் புரியாத...அம்மாவின் முத்தம்
குறிஞ்சிபூ பூத்ததுபோல்...அப்பாவின் முத்தம்
வெண்மீசை குத்தும்சுகம்...தாத்தாவின் முத்தம்
சலிக்காத சந்தோஷம்...பாட்டியின் முத்தம்
உயிரோடு உறைந்துவிடும்...உடன்பிறப்பின் முத்தம்
கன்னத்தில் காயங்கள்...காதலியின் முத்தம்
கண்களில் ஈரங்கள்...காதலனின் முத்தம்
மறித்தாலும் மறக்காது...மனைவியின் முத்தம்
கடைசிவரை கசக்காது...கணவனின் முத்தம்
வர்னிக்க தெரியவில்லை...குழந்தையின் முத்தம்
வர்னிக்க தேவையில்லை...அழும் நேரம் முத்தம்
நம் இதயத்தை இயன்றவரை இடம்மாற்றிக்கொண்டால்
இந்த முத்தங்கள் நம் வாழ்வில் சத்தங்கள் போடும்..!
குறிஞ்சிபூ பூத்ததுபோல்...அப்பாவின் முத்தம்
வெண்மீசை குத்தும்சுகம்...தாத்தாவின் முத்தம்
சலிக்காத சந்தோஷம்...பாட்டியின் முத்தம்
உயிரோடு உறைந்துவிடும்...உடன்பிறப்பின் முத்தம்
கன்னத்தில் காயங்கள்...காதலியின் முத்தம்
கண்களில் ஈரங்கள்...காதலனின் முத்தம்
மறித்தாலும் மறக்காது...மனைவியின் முத்தம்
கடைசிவரை கசக்காது...கணவனின் முத்தம்
வர்னிக்க தெரியவில்லை...குழந்தையின் முத்தம்
வர்னிக்க தேவையில்லை...அழும் நேரம் முத்தம்
நம் இதயத்தை இயன்றவரை இடம்மாற்றிக்கொண்டால்
இந்த முத்தங்கள் நம் வாழ்வில் சத்தங்கள் போடும்..!
தமிழ் குல(ள)த்து தாமரைகள்
I dedicate this poem to all Tamil girls ...proud to be a Tamil girl...:)
தமிழ் குல(ள)த்து தாமரைகள்
உங்களின் எண்ணெய் மின்னும் கருங்கூந்தலை கட்டிக்கொண்டபிறகு
மல்லிகைக்கும் மறுபிறவியில் ஆசை வந்தது
உங்கள் கொலுசுகளின் கொஞ்சலை காதோரம் கேட்க
பூமியும் காலம்காலமாய் காலடியில் கிடக்கிறது
நிறம் பூசா உங்கள் உதட்டழகை கண்டால்
நிறம் பூசிய உதடுகள் சிரிக்க சிந்திக்கும்
நீங்கள் கைமூடி சிரிக்கும் சிரிப்பழகை கண்டால்
அழகென்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் புரியும்
உங்கள் வெட்கத்தின் அழகை ஒருமுறை கண்டால்
உலக அழகி தோல்வியில் தலைகுனிந்து போவாள்
உங்களின் ஒப்பற்ற தாயன்பை ஒருமுறை கண்டால்
இறைவனும் உங்கள் மடியில் மழலையாய் மாறுவான்.
தமிழ் குல(ள)த்து தாமரைகள்
உங்களின் எண்ணெய் மின்னும் கருங்கூந்தலை கட்டிக்கொண்டபிறகு
மல்லிகைக்கும் மறுபிறவியில் ஆசை வந்தது
உங்கள் கொலுசுகளின் கொஞ்சலை காதோரம் கேட்க
பூமியும் காலம்காலமாய் காலடியில் கிடக்கிறது
நிறம் பூசா உங்கள் உதட்டழகை கண்டால்
நிறம் பூசிய உதடுகள் சிரிக்க சிந்திக்கும்
நீங்கள் கைமூடி சிரிக்கும் சிரிப்பழகை கண்டால்
அழகென்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் புரியும்
உங்கள் வெட்கத்தின் அழகை ஒருமுறை கண்டால்
உலக அழகி தோல்வியில் தலைகுனிந்து போவாள்
உங்களின் ஒப்பற்ற தாயன்பை ஒருமுறை கண்டால்
இறைவனும் உங்கள் மடியில் மழலையாய் மாறுவான்.
Friday, April 30, 2010
என் கனவே
இமைமூடும் இடைவெளியின் நேரத்திலும் உன்னை
கற்பனைசெய்ய கண் துடிக்கின்றதே..
என் சதை நரம்பு எலும்போடு நீ செர்ந்ததால்தான்
என் எடை கூட இன்று மிகையானதே..
சிந்திக்க தெரியத என் சிறுமூளை இன்று
அனு அனுவாய் அனுதினமும் என்னை அறுக்கின்றதே
என் சிறுகூட்டில் சிறைபட்ட செந்நீரும் இன்று
வெண்ணீராய் மாறி கொதிக்கின்றதே...
வெறும் காற்றை வேறோடு வெளியேற்றி விட்டு
இதயத்தின் இடமெல்லம் நீ வாங்கினாய்..
நீ மட்டும் என்றாவது பொய்யாகிப்போனால்
என் புலன் எல்லாம் புழுவுக்கு பசியாற்ற பொகும்..
கற்பனைசெய்ய கண் துடிக்கின்றதே..
என் சதை நரம்பு எலும்போடு நீ செர்ந்ததால்தான்
என் எடை கூட இன்று மிகையானதே..
சிந்திக்க தெரியத என் சிறுமூளை இன்று
அனு அனுவாய் அனுதினமும் என்னை அறுக்கின்றதே
என் சிறுகூட்டில் சிறைபட்ட செந்நீரும் இன்று
வெண்ணீராய் மாறி கொதிக்கின்றதே...
வெறும் காற்றை வேறோடு வெளியேற்றி விட்டு
இதயத்தின் இடமெல்லம் நீ வாங்கினாய்..
நீ மட்டும் என்றாவது பொய்யாகிப்போனால்
என் புலன் எல்லாம் புழுவுக்கு பசியாற்ற பொகும்..
Thirumanam
Eru manamum oru manmai enaiyum intha thirumana naalil..
Selavazhethum santhoshathil
Manamagal thanthaiyum
Varavilum siru patarakurayil
Manamgan thanthaiyum
Vayettrin nerupanaintha ananthathil
Manamagal thayum
Mathipala ellai mithipaala endra kuzhapathil
Manamagan thayum
Bayam kalantha santhoshathil
Manamagalum
Poruppu enum sugamana sumayil
Manamaganum...
Ippadi mari mari manathidam muraiettu kondirukkum
Intha ottu motha unarchi kuviyalin arangettram than "Thirumanam"
Selavazhethum santhoshathil
Manamagal thanthaiyum
Varavilum siru patarakurayil
Manamgan thanthaiyum
Vayettrin nerupanaintha ananthathil
Manamagal thayum
Mathipala ellai mithipaala endra kuzhapathil
Manamagan thayum
Bayam kalantha santhoshathil
Manamagalum
Poruppu enum sugamana sumayil
Manamaganum...
Ippadi mari mari manathidam muraiettu kondirukkum
Intha ottu motha unarchi kuviyalin arangettram than "Thirumanam"
Natpu
Niram mara nilaiyana urave unnidam.....
Udalai meeri unarvai kanden
Azhagai meeri anbai kandan
Panathai meeri pasam kanden
Manitharil mattroru mathathai kanden
Anbin puthiya artham kanden
Anathai unarvu azheya kanden
Vetriyil thanthain anantham kanden
Tholviyil thayin nagalai kanden
Piriyum tharunam un karuvizhe kanden
Marana tharunam oththigai kanden
Pasam ennidam kuraivai kanden
Pasiyum unnidam pagirnthu konden
Varumai nammai vattiya pothum
Vattra inbam unnal kanden
Sinathal unnai sithaitha pothum
Un mazhalai sirippil mannippai kanden
Mullai kuttrum manithargalukkidaiye
Mullila rojavai muthalmurai kanden
Kan kana thooran nee kalangi nindralum
Un kaneer thuligalil nan kalanthiruppen....
Udalai meeri unarvai kanden
Azhagai meeri anbai kandan
Panathai meeri pasam kanden
Manitharil mattroru mathathai kanden
Anbin puthiya artham kanden
Anathai unarvu azheya kanden
Vetriyil thanthain anantham kanden
Tholviyil thayin nagalai kanden
Piriyum tharunam un karuvizhe kanden
Marana tharunam oththigai kanden
Pasam ennidam kuraivai kanden
Pasiyum unnidam pagirnthu konden
Varumai nammai vattiya pothum
Vattra inbam unnal kanden
Sinathal unnai sithaitha pothum
Un mazhalai sirippil mannippai kanden
Mullai kuttrum manithargalukkidaiye
Mullila rojavai muthalmurai kanden
Kan kana thooran nee kalangi nindralum
Un kaneer thuligalil nan kalanthiruppen....
கடல்
எத்தனையோ பேருக்கு உணவலிக்கிற என் கடல் அன்னையே,
ஊன்னுள் எப்படி இதனை விடாமுயர்ச்சி!!!
காலம் காலமாய் கரையை கடக்க முயன்றுகொண்டிருகிறாயே
தோல்வியை நினைத்து துவன்று விடதே,
நீ எத்தனை முறை தோற்கிறாயோ , நாங்கள் அத்தனை முறை உயிர் பிச்சை அளிக்கப்படுகிறோம்
ஊன்னுள் எப்படி இதனை விடாமுயர்ச்சி!!!
காலம் காலமாய் கரையை கடக்க முயன்றுகொண்டிருகிறாயே
தோல்வியை நினைத்து துவன்று விடதே,
நீ எத்தனை முறை தோற்கிறாயோ , நாங்கள் அத்தனை முறை உயிர் பிச்சை அளிக்கப்படுகிறோம்
Natchathiram
Paurnamiyin pakkathil nee pathukkapattalum,
Amavasai eravin katha nayagan nee…!
Mangalamai minnum nee ellamal ponal,
Vanamum venpudavayil vithavaiyai theriyum..
Unnai enni solla ennidam Enniyalum ellai
Unnai alanthu solla ennidam Minniyalum ellai
Unnai Thottu parka ennidam VinGnanamum ellai
Unnai Eatti parka ennidam MeiGnanamum ellai
Motthamai un azhagai aaraainthu solla
Eno enakintha aararivu mattum pothavillai….
Amavasai eravin katha nayagan nee…!
Mangalamai minnum nee ellamal ponal,
Vanamum venpudavayil vithavaiyai theriyum..
Unnai enni solla ennidam Enniyalum ellai
Unnai alanthu solla ennidam Minniyalum ellai
Unnai Thottu parka ennidam VinGnanamum ellai
Unnai Eatti parka ennidam MeiGnanamum ellai
Motthamai un azhagai aaraainthu solla
Eno enakintha aararivu mattum pothavillai….
வெள்ளை ரத்தங்கள்
அழுதால்தான் தெரியும் ஆனந்ததின் மகிமை
விழுந்தால்தான் தெரியும் வெற்றியின் மகிமை
அழுதும்விட்டென்....விழுந்தும்விட்டேன்....
விரும்பவில்லை வேறொன்றை தெரிந்துகொள்ள...!!!
ஆறுதல் அடைய ஆயிரம் முறை முயன்றாலும்,
அடிக்கடி ஏனொ விழியின் ஓரம் வெள்ளை ரத்தங்கள்..!!!
விழுந்தால்தான் தெரியும் வெற்றியின் மகிமை
அழுதும்விட்டென்....விழுந்தும்விட்டேன்....
விரும்பவில்லை வேறொன்றை தெரிந்துகொள்ள...!!!
ஆறுதல் அடைய ஆயிரம் முறை முயன்றாலும்,
அடிக்கடி ஏனொ விழியின் ஓரம் வெள்ளை ரத்தங்கள்..!!!
Subscribe to:
Posts (Atom)