ஏய் விதியே,
சுமையுடன் துடிக்கும் இதயம்
வலியுடன் சிரிக்கும் இதழ்கள்
கனவுகள் கலைந்த தூக்கம்
இன்பமே இல்லா இளமை
நம்பவே முடியவில்லை....
இத்தனைக்கும் காரணம் நீயா என்று..!
மன்னித்துவிடு ...
உன்னைவிட்டால் எனக்கு குறைகூற ஆளில்லை..!
எத்தனையோ எலும்புகளும் சதைகளும் உலவும் இவ்வுலகில்
எதற்காகவோ நானும் உலவிக்கொண்டிருகிறேன்.
இன்னும் சில நாட்களில், கண்ணீர் இல்லாமல்
என் விழிகளே வழிந்துவிடலாம்..
பரவாயில்லை...
நான் தோற்றால்தான் நீ வெல்வாய்யென்றால்
உனக்காக வாழ் நாள் முழுதும்கூட தோற்றுக்கொண்டே இருப்பேன்...:)
புன்னகையுடன்
அருண்
Sunday, August 22, 2010
Subscribe to:
Posts (Atom)