Thursday, December 30, 2010

புன்னகை:)

மனிதப்பிறவியின் அடையாள அட்டையே
என் மனதை உலகிற்கு பிரதிபோட்டு காட்டுகிறாய் .

சின்னதாய் ஒருமுறை ,சிக்கனமாய் சிலமுறை ,
சத்தமாய் பலமுறை ,வெட்கமாய் சிலமுறை ,
எத்தனை பிறவியை எனக்காக எடுக்கிறாய் ...

புன்னகை பெண்ணிடம் பொன்னகை பார்த்ததில்லை .
சில கண்ணிலும் புன்னகை மின்னலாய் பார்க்கிறேன் .

கவிதையாய் உன்னை கரையேற்றி விட்டால்
என் கற்பனை கரைந்து காணாமல் போகும் ,
அகவே , மிச்சத்தை மனதில் அசைபோட்டு கொண்டு
அடுத்தவரிடம் உன்னை அறிமுகம் செய்வேன் .
---அருண்:)

No comments:

Post a Comment