Sunday, April 16, 2017

நகரம்

பக்கத்துக்கு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது....


"மண்ணை  தொடாதே  அழுக்கு " என்று வளர்க்கப்படும்  குழந்தைகள் ..
இனி பட்டாம்பூச்சியை கொசுவை போல் அடித்து கொன்றுவிடுமோ .? என அஞ்சுகிறேன்

சித்தப்பா பெரியப்பா என ஊரே சொந்தமான காலம் போய் ,
இன்று தாத்தா பாட்டியையும் அந்நியமாய்  பார்க்கிறதே!

தொலைக்காட்சி விளையாட்டில் வெற்றி கிடைக்காது குழந்தாய்!
உன் கணினி பூக்களில் வாசம் வீசாது கண்ணே !

வாணும் நிலவும் உனக்கு சுற்றுலா தளங்கள் ,
இனி வெய்யிலும் மழையும் உனக்கு வரலாற்று பாடங்கள்.


பக்கத்துக்கு வீட்டில் குழந்தை பிறந்திருக்கிறது....மகிழ்வதா.. அழுவதா.

                                                                                                                -அருண்