Friday, April 30, 2010

என் கனவே

இமைமூடும் இடைவெளியின் நேரத்திலும் உன்னை
கற்பனைசெய்ய கண் துடிக்கின்றதே..

என் சதை நரம்பு எலும்போடு நீ செர்ந்ததால்தான்
என் எடை கூட இன்று மிகையானதே..

சிந்திக்க தெரியத என் சிறுமூளை இன்று
அனு அனுவாய் அனுதினமும் என்னை அறுக்கின்றதே

என் சிறுகூட்டில் சிறைபட்ட செந்நீரும் இன்று
வெண்ணீராய் மாறி கொதிக்கின்றதே...

வெறும் காற்றை வேறோடு வெளியேற்றி விட்டு
இதயத்தின் இடமெல்லம் நீ வாங்கினாய்..

நீ மட்டும் என்றாவது பொய்யாகிப்போனால்
என் புலன் எல்லாம் புழுவுக்கு பசியாற்ற பொகும்..

No comments:

Post a Comment