Sunday, July 24, 2016

சில சிந்தனைகள் .....

யார் வாழ்க்கையும் இங்கே பாடமில்லை,
யாரையோ பார்த்து வாழ்வதற்கு விருப்பமில்லை.

கோபத்தை வெளிப்படுத்த தயங்கினால் கோழையோ?
இரக்கமனம் மனம் இருந்தால் ஏமாளியோ?
அனைவருக்கும் வளைந்துகொடுத்தால் பச்சோந்தியோ?
தெரியாது என ஒப்புக்கொண்டால் கையாலாகாதவனோ?
நட்பாக பெண்ணை பார்த்தால் ஆண்மையற்றவனோ?
புகை மது தவிர்த்தால் வாழத்தெரியாதவனோ?

கொடுமையிலும் கொடுமை கொடுமையை கொடுமை என புரிந்துகொள்ளாததுதான்.
முட்டாள் என தெரியாமல் வாழ்வதே உத்தமம்.தெரிந்துவிட்டால் வாழ்வது கடினம்.
தகுதியற்றவனுக்கு கிடைக்கும் அற்புத வாழ்வு, கடவுள் கொடுத்த மிகப்பெரும் தண்டனை.
வாழவும் தெரியவில்லை ,வேஷம் போடவும் தெரியவில்லை.மூச்சு மட்டும் விட்டுக்கொண்டிருக்கின்றேன்.

"
எப்பிறப்பில் செய்தவினை எப்பிறப்பை தந்ததோ
முப்பிறப்பில் செய்தவினை இப்பிறப்பாய்  வந்ததோ
இப்பிறப்பை ஒப்புவித்தேன் அப்பனே உன் பொறுப்பில்
இனி எப்பிறப்பும் நேராது காண்.

"

எனும் இளையராஜாவின் வெண்பா  மனதில் கெட்டியாக  ஒட்டிக்கொண்டது .

                                                                                                                         -அருண்குமார்