அளவிள்ளா ஆனந்தம் நெஞ்சடைக்கும் போதும்
அரைஅடி கூட சிரிக்க முடியாத உதடுகள்...
இலை நிறைய உணவை பறிமாறும்போதும்
குடல் நிறைந்துவிட்டால் மறியல் செய்யும் வயிறு...
கடலளவு சோகம் கரை புரளும் போதும்
சிறுசிறு துளிகளையே சிந்துகின்ற கண்கள்...
ஆறடுக்கு மாளிகைக்கு சொந்தமான போதும்
ஆறடிக்குமேல் அடைத்துகொள்ள முடியாத உடல்....
இத்தனை வறுமை நம்முள் இருக்க
நாம் எப்படி செல்வந்தர் ஆவோம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment