Saturday, December 4, 2010

அன்புள்ள மகனுக்கு..

உன் நேரத்தை வீணடிக்க விரும்பாதபோதும்
என் சோகத்தை சொல்ல எனக்கு வேறாரும் இல்லை.

தள்ளாத வயதில் தனியாக ஏனோ
பொல்லாத உலகில் போராட முடியவில்லை.

உன் சிரிப்பொலியை கேட்ட சுவர்களுக்கிடையே
என் எதிரொலியை மட்டும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

மாதம் ஒருமுறை உன் குரல் கேட்கும் இன்பம்
மாதாமாதம் நீ அனுப்பும் காகிதங்களில் இல்லை.

நீ தொட்டு சென்ற பொருள்களையெல்லாம்
தடவிப்பார்த்தே காலம் தள்ளுவேன்.

சத்தில்லா இந்த சருகான தேகம்
சட்டென்று ஒரு நாள் சாய்ந்தாலும் சாயும்.

எனை "ஈ" மொய்க்கும் செய்தியை காதோரம் கேட்டால்
"அம்மா" என்றழுது ஓடோடி வருவாயா!!!!

இப்படிக்கு
உன்னை பெற்றெடுத்த மலடி.

No comments:

Post a Comment