Saturday, May 1, 2010

முத்தம்

அர்த்தங்கள் புரியாத...அம்மாவின் முத்தம்
குறிஞ்சிபூ பூத்ததுபோல்...அப்பாவின் முத்தம்

வெண்மீசை குத்தும்சுகம்...தாத்தாவின் முத்தம்
சலிக்காத சந்தோஷம்...பாட்டியின் முத்தம்

உயிரோடு உறைந்துவிடும்...உடன்பிறப்பின் முத்தம்

கன்னத்தில் காயங்கள்...காதலியின் முத்தம்
கண்களில் ஈரங்கள்...காதலனின் முத்தம்

மறித்தாலும் மறக்காது...மனைவியின் முத்தம்
கடைசிவரை கசக்காது...கணவனின் முத்தம்

வர்னிக்க தெரியவில்லை...குழந்தையின் முத்தம்
வர்னிக்க தேவையில்லை...அழும் நேரம் முத்தம்

நம் இதயத்தை இயன்றவரை இடம்மாற்றிக்கொண்டால்
இந்த முத்தங்கள் நம் வாழ்வில் சத்தங்கள் போடும்..!

No comments:

Post a Comment