Monday, March 12, 2012

வாழ்க்கை

தட்டுத்தடுமாறி எழுந்து நிற்கும்
குழந்தையை பாருங்கள்,
'விடாமுயற்சிக்கு' விடை கிடைத்துவிடும்!


தன் தாய்பாலையே நமக்கு தாரைவார்க்கும்
கன்றுகுட்டியை பாருங்கள்,
'விட்டுக்கொடுத்தலுக்கு' விளக்கம் கிடைத்துவிடும்!

வேற்றுமை பாராமல் எல்லாபூவையும் முத்தமிடும்
வண்டை பாருங்கள்,
ஜாதிமத பேதம் பறந்தோடிவிடும்!

வரிசையாய் செல்லும் எரும்பை பாருங்கள்,
ஒழ்க்கம் வந்து உடம்போடு ஊறிவிடும்!

முள்ளை வைத்தே கூடுகட்டி
புதுமனை புகுவிழா நடத்தும் குருவியை பாருங்கள்,
தன்னம்பிக்கை வந்து தானாய் ஒட்டிக்கொள்ளும்!

இத்தனை நாள் எனோ தெரியவில்லை
இதுதான் வாழ்க்கை தத்துவம் என்று!

ஆம்,
'என்னடா வாழ்க்கை' என சலிப்பாய் பார்த்தால்,
தலைமுடி கூட பாரம்தான்!

ரசித்து பாருங்கள்,
காக்கையின் அழகும் கன்னுக்குள்ளே நிற்கும்!