Sunday, May 30, 2010

குருவிக்கூடு

மறப்பேனா அன்னையே!
என் பசியையும் ருசியையும் பார்வையிலேயே
தெரிந்துகொள்ளும் உன் பாசத்தை...
என் கழுத்துவரை அன்னமிட்டும் "இன்னும் கொஞ்சம்"
என இன்றுவரை நீ கெஞ்சுவதை....
என் நெற்றிதுளிகல் எட்டி பார்க்கும்முன்
தொட்டு துடைக்கும் உன் புடவை முந்தானையை
மறப்பேனா அன்னையே!
உன் கரம் மீது கண்ணுறங்கிய அந்த சில நாட்களை!

மறப்பேனா தந்தையே!
அதிகலை மூன்றுக்கும் எனக்காக தனியாக
நீ காத்திருந்த காலங்களை...
என் தலையருகே விசிரியபடி நான் கண்ணுறங்க
நீ கண்விழித்த இரவுகளை...
எனக்காக சிரம்பட்டு,எனக்காக கடன்பட்டு
நீ பட்ட கஷ்டங்கள்...
மறப்பேனா தந்தையே!
என் வெள்ளை சட்டை உன் வியர்வையில் சலவை செய்தது என்பதை!

மறப்பேனா அண்ணனே!
ஓரு தட்டில் ஒன்றக நாம் பசியாரிய நாட்களை!

மறப்பேனா தம்பியே!
உன் மழலை மொழியை மணிக்கனக்காய் ரசித்ததை!

முள்ளின் மீதே தூங்கினாலும்
குத்தவில்லை இந்த குருவிக்கூட்டில்..!

என்ன தவம் செய்தேனொ,
வரங்களுடனே வாழ்கிறேன்..!

No comments:

Post a Comment