Saturday, May 1, 2010

தமிழ் குல(ள)த்து தாமரைகள்

I dedicate this poem to all Tamil girls ...proud to be a Tamil girl...:)


தமிழ் குல(ள)த்து தாமரைகள்

உங்களின் எண்ணெய் மின்னும் கருங்கூந்தலை கட்டிக்கொண்டபிறகு
மல்லிகைக்கும் மறுபிறவியில் ஆசை வந்தது

உங்கள் கொலுசுகளின் கொஞ்சலை காதோரம் கேட்க
பூமியும் காலம்காலமாய் காலடியில் கிடக்கிறது

நிறம் பூசா உங்கள் உதட்டழகை கண்டால்
நிறம் பூசிய உதடுகள் சிரிக்க சிந்திக்கும்

நீங்கள் கைமூடி சிரிக்கும் சிரிப்பழகை கண்டால்
அழகென்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் புரியும்

உங்கள் வெட்கத்தின் அழகை ஒருமுறை கண்டால்
உலக அழகி தோல்வியில் தலைகுனிந்து போவாள்

உங்களின் ஒப்பற்ற தாயன்பை ஒருமுறை கண்டால்
இறைவனும் உங்கள் மடியில் மழலையாய் மாறுவான்.

No comments:

Post a Comment