Saturday, May 15, 2010

ஏமாற்றம்

சலிக்காமல் எனை சந்திக்கும் ஏமாற்றமே உன்னால்...

கண்ணுக்கும் தெரியாமல் அழுகின்றேன்
முன்போல மூச்சிவிட மறக்கின்றேன்.

கண்ணீரின் வெப்பத்தில் கறைகின்றேன்
என் கவலைகளை கவிதையாய் கறைக்கின்றேன்.

சிரிக்கின்ற சில நாளை பறிக்கின்ற நீயே
என் இதயத்தின் துகள்களை எண்ணி எனக்கு சொல்லு...!

இமயமாய் கனக்கும் இத்தனை வலிகளை
எழுதுகோளின் முனைவரை எடுத்துவர முடியவில்லை...!

எத்தனை முறைதான் விழுவேன் ! எத்தனை முறைதான் அழுவேன்!
அத்தனையும் மறக்கிறேன்..அடுத்தவருக்காக சிரிக்கிறேன்..!

விடுகதையாய் இருக்கும் இந்த வாழ்க்கையில் ஏனோ
தொடர்கதையாய் துரத்துகிறது இந்த (ஏ)மாற்றங்கள்...!

-அருண்குமார்

No comments:

Post a Comment