எத்தனை நாள் வாழப்போகிறதோ தெரியவில்லை
அத்தனை நாளும் உழைக்கிறது கட்டெறும்பு!
யார் பசியை போக்க நினைத்தானோ தெரியவில்லை
வெறும் வயிற்றிலும் ஏர் உழுதுகொண்டிருக்கிறான் உழவன்!
நகர்ந்த நாட்களை மறந்திடுவோம்
மலரும் நாட்களை நகர்த்திடுவோம்
நெருப்பையும் சுமக்கும் சக்தி உன் நெஞ்சுக்குண்டு
சூரியனை சுடம் சுடர் உன் கண்களிலுண்டு!
உன் வியர்வை துளிகள் வெற்றி விருந்துக்கு
உப்பாய் மாறட்டும்...
உழைப்பவன் வீழ்வதில்லை!
வீழ்பவன் உழைப்பதில்லை!
உண்மையாய் உழைப்போம்
உயிர் உதிரும் வரை உழைப்போம்.
---அருண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment