கண்ணிலிருந்து மறையும்வரை எனை எட்டி எட்டி பார்த்துகையசைத்து அம்மா அனுப்பிய பயணங்கள்...
அருகில் அமர்ந்தவன் அறியாமல் அழுது
கைகுட்டை நனைத்த பயணங்கள்...
மல்லிப்பூவும் ரத்த வாடை வீசிய
விபத்தை கண்ட பயணங்கள்...
தங்கத்தை விட ஆழமாய் புதைந்த நினைவுகளை
தேடிப்போய் பார்த்த பயணங்கள்...
நெருப்பை அள்ளி நெஞ்சில் கொட்டிய நினைவுகளை
அசைப்போட்டு சுவைத்த பயணங்கள்...
சில பயணத்தை ஏனோ நானே தவிர்த்தேன்,
நினைவுச் சுமைகள் கூடாமல் இருக்க...
ஒவ்வொறு பயணமும் ஒவ்வொறு சகாப்தம்
ஓராயிரம் மயில்களை கடந்த களைப்பு
கன்னங்கள் முழுதும் கண்ணீர் காய்ந்த தடங்கள்...
இறைவா,
எங்கள் வாழ்க்கை பயணம் வசந்தம் வீச தேவை இல்லை,
தினமும் ஒருமுறை சிறிதாய் சிரிக்கும் வரம் தா போதும்.
---அருண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment