சென்ற இடமெல்லாம் எனக்கு தரிசனம் தருகிற தோல்வியே,
என் மேல் உனக்கென்ன அப்படி ஒரு ஆசை...
இப்படி விரட்டி விரட்டி காதலிக்கிறாயே!
உன்னிடம் மிதிபட்டு மிதிபட்டு,
என் நெஞ்சுக்குழி சிதைந்துவிட்டது!
அடிபட்டு அடிபட்டு,
இதயம் பிளந்து இதயங்கள் ஆகிவிட்டது!
நான் அழுதுவிட்டால் 'கோழை' என்பார்கள்...
புலம்பிவிட்டால் 'பேதை' என்பார்கள்...
வழக்கம்போல் என் மனதிடமே வாதாடிகொள்கிறேன்!
எப்படி மறப்பேன் இத்தனை காயங்களை,
இப்படி பித்தனை போல கவிதை எழுதிதான்!
நிச்சயம் ஒரு நாள் உன்னை உனக்கு அறிமுகம்செய்வேன்,
என் வலிகள் அனைத்தையும் உனக்கு உயில் எழுதிவைக்கிறேன்!
அழுவதற்க்கு நேரமில்லை,
அடுத்த தோல்விக்கு ஆயத்தமாகிறேன்!
மீண்டும் சந்திப்போம்
அருண்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment